Saturday 16 April 2016

ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கி திடீர் சோதனை

இலங்கை நோக்கி புறப்­பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் சிங்­கப்பூர் ஷேங்கி சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீண்டும் நேற்று அதி­காலை இலங்­கையை வந்­த­டைந்­துள்­ளது.


யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமானம் நேற்­று­முன்­தினம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டு சற்று நேரத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது.
விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரிகள் வழங்­கிய பாது­காப்பு தொடர்­பான எச்­ச­ரிக்கை அறி­விப்பை அடுத்தே விமானம் தரை­யி­றக்­கப்­பட்­டது.
விமானம் தரை­யி­றக்­கப்­பட்ட பின்னர், சில பய­ணி­க­ளிடம் சிங்­கப்பூர் பொலி­ஸாரும், விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரி­களும் விரி­வான விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர்.
இவர்­களில் 5 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம் கூறி­யுள்­ளது. விமா­னத்தில் இருந்து அனைத்து பொதி­களும் இறக்­கப்­பட்டு மீண்டும் சோத­னை­யி­டப்­பட்­டுள்­ளன.
எவ்­வா­றா­யினும் விமானம் ஒன்று விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்­படும் முன்னர், முழு­மை­யாக சோத­னை­யி­டப்­பட வேண்டும் என்ற சர்­வ­தேச ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கொள்கை ஒன்று இருப்­ப­தாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இவ்­வா­றான நிலையில், விமானம் புறப்­பட்டு சற்று நேரத்தில் தரை­யி­றக்­கப்­பட்டு சோத­னை­யி­டப்­பட்­டமை தொடர்பில் சிங்கப் பூர் சிவில் விமான சேவை அதிகார சபை யிடம் விளக்கம் கோரப்படும் எனவும் நிறு வனம் கூறியுள்ளது.virakesari.lk

No comments:

Post a Comment